திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 2 பேரிடம் கத்தி முனையில் வழிப்பறி ஈடுபட்டு தப்பியோடிய இளைஞர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்

0 1716

திண்டுக்கல்லில் இரவு நேரத்தில் கத்தி முனையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 17 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட 3பேர் கும்பலில் 2 பேரை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.

கார் ஓட்டுநரான அருண்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழித்த போது, டூவீலரில் வந்த 3 பேர் கத்தி முனையில் அவரை மிரட்டி 2 பவுன் நகை, கம்மல் மற்றும் செல்போனை வழிப்பறி செய்தனர்.

அங்கிருந்து சிறிது தூரத்தில் எதிரே வந்த பெண் ஒருவரிடமும் செல்போனை வழிப்பறி செய்யவே இருவரும் கூச்சலிட்டதால் அப்பகுதி பொதுமக்கள் வழிப்பறி திருடர்களை டூவீலரில் விரட்டிச் சென்று மடக்கினர்.

பாலதிருப்பதி பகுதியைச் சேர்ந்த நவீன் மற்றும் சதீஸை பிடித்து போலீஸில் ஒப்படைத்த நிலையில் தப்பி ஓடிய மற்றொருவருரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments