மாரத்தான் ஓடத் தெரிந்த மா.சு வுக்கு மருத்துவத்துறையை ஓட்டத் தெரியவில்லை - செல்லூர் ராஜூ கிண்டல் பேச்சு

0 3765

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓடுகிறார், ஆனால் அவருக்கு மருத்துவத் துறையை ஓட்டத் தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நமது மாநிலம் மாசு அடைய காரணம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தான் என்றார்.

முன்னதாக அதிமுக நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று செல்லூர் ராஜுக்கு சால்வை அணிவித்தனர். இதனை அவர் "சால்வையை போடுறாங்க போடுறாங்க போட்டுட்டே இருக்காங்க" என்று நகைச்சுவையாக பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments