சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

0 2587

சிக்கிம் மாநிலத்தில் இம் மாதத் தொடக்கத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

76 பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

19 நிவாரண முகாம்களில் சுமார் இரண்டாயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளில் இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப்பட்ட சாலைகள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments