தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கால்வாயில் விழுந்த காரில் இருந்த 4 பேரை மீட்ட ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள்

0 1053

தஞ்சாவூர் அருகே விபத்தில் சிக்கி கால்வாயில் விழுந்த காரில் இருந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் மீட்டனர்.

அய்யம்பேட்டையைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்த போது கரம்பை அருகே விபத்தில் சிக்கியுள்ளார்.

சாலையில் இடது புறம் நெல் கொட்டி காய வைக்கப்பட்டிருந்ததால், வலப்புறமாக சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதுவதை தவிர்க்க காரை திருப்பியதில் சாலை ஓரம் இருந்த கால்வாயில் கார் விழுந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அவ்வழியாக நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் காரிலிருந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments