திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை முட்டி தூக்கி வீசிய மாடு... மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாடுகளை பிடிக்க உத்தரவு

0 1421

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே தெருவில் நடந்து சென்ற போது மாடு முட்டி தூக்கி வீசியதில் படுகாயமடைந்த முதியவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க உத்தரவிட்டதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளை பிடித்துச் சென்றனர்.

மாடு முட்டியதால் தலையில் பலத்த காயமடைந்த முதியவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில், ஆணையர் ராதாகிருஷ்ணன், அவரை மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments