மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு.. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று தகவல்

0 2374

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்துவதற்கு இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஒப்புதல் அளித்தால் தற்போதைய 42 சதவீத அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். ஜூலை 1- ஆம் தேதியை முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்த்தப்படலாம்.

நவம்பர் மாதத்தில் சம்பளத்துடன் ஜூலை முதல் நவம்பர் வரையிலான தொகை கணக்கிட்டு வழங்கப்படும். இதனால் 47 லட்சம் அரசு ஊழியர்களும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments