தில் ராஜு மருமகனின் ரூ.2 கோடி மதிப்புள்ள சொகுசு கார் திருட்டு.. மாட்டியதும் போலீசிடம் திருடன் சொன்ன வித்தியாச வாக்குமூலம்..!

0 2622

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், சொகுசு கார்கள் மீதான மோகத்தால் விலை உயர்ந்த கார்களைத் திருடி, எரிபொருள் தீரும்வரை காரை ஓட்டி அனுபவித்துவிட்டு சாலையில் விட்டுச் செல்லும் நபர் கைது செய்யப்பட்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜுவின் மருமகன் அர்சித் ரெட்டி சில நாட்களுக்கு முன் நட்சத்திர ஹோட்டலில் உள்ள ஜிம்முக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷா காரில் சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்தபோது காரைக் காணவில்லை. புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடியபோது, மன்சுராபாத் பகுதியைச் சேர்ந்த கிரண் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். மென்பொருள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்துவரும் அவர் இதுபோல் சொகுசுக் கார்களைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments