கொங்கு மண்டலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை... காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்துமாறு கொங்கு ஈஸ்வரன் வேண்டுகோள்

0 2888

கொங்கு மண்டலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை குறித்து காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் பேசிய அவர், எங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதி என தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் என்றார்.

பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி தர வேண்டும் என்று கூறிய ஈஸ்வரன், சாதி வாரிய கணக்கெடுப்பு எடுத்தால் தான் அனைவருக்கும் சமமான நீதி வழங்க முடியும் என்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments