சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய நியூசி. அணி வீரர்கள்

0 3658

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் நியூசிலாந்து அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடினர்.

வரும் 18ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் சென்னையில் விளையாட உள்ள நியூசிலாந்து வீரர்கள், மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் பயிற்சி பெறும் அரசு பள்ளிகளை சேர்ந்த 58 மாணவர்கள் நியூசிலாந்து வீரர்களுடன் கலந்துரையாடினர்.

மாணவர்களுடன் உடற்பயிற்சியிலும் ஈடுபட்ட வீரர்கள், அவர்களுக்கு கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.

இது குறித்து தெரிவித்த நியூசிலாந்து வீரர் மார்க் சாப்மன், அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுப்படுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments