ஒரு தலைக்காதலில் சகோதரி மகளை கழுத்தறுத்துக் கொன்ற தாய்மாமன்..

0 2146

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஒருதலைக்காதலால் சொந்த சகோதரி மகளை கொலை செய்துவிட்டு தப்பியோடிய தாய்மாமன் தற்கொலைக்கு முயன்று விஷமருந்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான். 

கே.பந்தாரப்பள்ளியைச் சேர்ந்த, 34 வயதான சரண்ராஜ் என்ற அந்த நபர், 18 வயது கல்லூரி மாணவியான தனது சகோதரி மகளை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளான்.

அவரை திருமணம் செய்து தர சகோதரி குடும்பத்தினர் மறுத்ததால், மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு சரண்ராஜ் தப்பியோடி தலைமறைவானான்.

போலீசார் அவனைத் தேடி வந்த நிலையில் அதிகாலை வெலக்கல்நத்தம் பகுதியிலுள்ள டீக்கடை அருகே சரண்ராஜ் அமர்ந்திருந்ததைப் பார்த்து பொதுமக்கள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அவனை மடக்கியபோது, தாம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டதாகக் கூறியுள்ளான். அதனையடுத்து நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments