செங்கம் அருகே லாரியும், காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

0 4089

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே லாரியும், காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பக்கிரிபாளையம் அருகே திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற காரும், திருவண்ணாமலை நோக்கிவந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து தொடர்பாக செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments