ஒரு தலைக் காதலால் நேர்ந்த விபரீதம்... கல்லூரி மாணவியை சொந்த தாய் மாமனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம்

0 2378

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஒரு தலை காதல் காரணமாக கல்லூரி மாணவியை சொந்த தாய் மாமனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே. பந்தாரப்பள்ளி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த பெருமாள் - ஜெயப்பிரதா தம்பதியினரின் மகள் ஜீவிதா பர்கூர் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்வி பயின்று வந்துள்ளார்.  இந்நிலையில் இவருடைய தாயின் சகோதரர் சரண்ராஜ் என்பவர் ஜீவிதாவை ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்ததாகவும், அக்கா ஜெயப்பிரதாவிடம் ஜீவிதாவை திருமணம் செய்து வைக்க ஒப்புதல் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைதாகி இருந்த சரண்ராஜ்க்கு மகளை திருமணம் செய்து வைக்க விரும்பாததால் பெற்றோர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஜீவிதாவை அம்மா வீட்டில் இல்லை என்று பொய் சொல்லி பாட்டி சியாமளா வீட்டிற்கு சரண்ராஜ் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கு யாரும் இல்லாத சமயத்தில் ஜீவிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு சரண்ராஜ் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments