ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் 5 விசைப் படகுகளுடன் சிறைபிடிப்பு... எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கை கடற்படை

0 955

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 விசைப்படகையும் அதிலிருந்த 28 மீனவர்களையும்  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர்  ஒரே நாளில் அடுத்தடுத்து சிறைபிடித்து  சென்றுள்ளனர்.

தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த  2 படகையும் அதிலிருந்த 15 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் மாலை கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 படகையும், மண்டபம் பதிவெண் கொண்ட ஒரு விசைப்படகு மற்றும் கோட்டைபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகு என மொத்தமாக 3 படகையும் அதிலிருந்த 13 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments