தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மாணவி தற்கொலை... பேராசிரியர் பரமசிவதிடம் போலீசார் விசாரணை

0 3667

குமரி மாவட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைதான பேராசிரியர் பரமசிவத்திடம் போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கல்லூரி மருத்துவமனையில்  எம் டி இரண்டாம் ஆண்டு படித்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சுகிர்தா என்ற  மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மாணவி எழுதிய தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் பேராசிரியர்  உட்பட மூவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகவும்,  மருத்துவ மாணவர்கள் பிரீத்தி,ஹரிஷ் ஆகியோர் மனரீதியாக தொல்லை அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் அந்த மூன்று பேரையும் விசாரணை முடியும் வரை  மருத்துவ நிர்வாகம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments