சென்னையில், அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு பழிக்குப்பலியாக ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டி கொலை

0 2278

சென்னையில், அ.தி.மு.க. நிர்வாகி கொலைக்கு பழிக்குப்பலியாக ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

மயிலாப்பூரைச் சேர்ந்த ஏ பிரிவு ரவுடியான சரவணன் என்ற கிழங்கு சரவணன் மீது கொலை, கொள்ளை, உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ள நிலையில் குடும்பத்துடன் வானகரத்தில் வசித்து வந்தார்.

டிபன் சாப்பிடுவதற்காக குடும்பத்தினருடன் ஆட்டோவில் சென்ற சரவணனை 4 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் வழிமறித்து, மனைவி, மகள் கண்முன்பே சரவணனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

கடந்த 2021ம் ஆண்டு மயிலாப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் கோபியின் நினைவு நாளன்று சிறையில் வைத்து சரவணனை கொலை செய்ய எதிர்தரப்பினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த பவித்ரன் உள்ளிட்ட 5 பேர் ஆற்காடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments