நாளை நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வழங்க வலியுறுத்தப்படும்

0 1448

நாளை நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வழங்க கோரிக்கை வைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சென்னை கோட்டூர்புரம் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார். 

கடந்த முறை 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி திறக்க  உத்தரவிட்டதன்படி நேற்று வரை 4.21 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments