சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை

0 1582

விருதுநகர் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

மாரியப்பன் என்பவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அக் 9ஆம் தேதி மாலை மூளைச்சாவு அடைந்து இறந்த நிலையில் உறவினர்கள்  உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

சிறுநீரகம், கல்லீரல், கண் கருவிழி உட்பட 5 உறுப்புகள் எடுக்கப்பட்டு திருநெல்வேலி, மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

பிறகு அவரது உடலுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி காவல்துறை பாதுகாப்புடன் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அங்கு காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் அரசு மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments