ஹமாஸ் போராளிகள் மீதான தாக்குதலை 3 லட்சம் வீரர்களைத் திரட்டி தீவிரப்படுத்திய இஸ்ரேல் ராணுவம்

0 1146

காஸா பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்காக, கடந்த 48 மணி நேரத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைத் திரட்டியுள்ளதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரி டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் 4500 ராக்கெட் தாக்குதல்களைத் தொடுத்ததாகவும், பதிலுக்கு ஹமாஸின் 1200-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸாவில் 30 பேரை ஹமாஸ் போராளிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுடன் நீண்ட போருக்குத் தயாராக உள்ளதாக ஹமாஸ் போராளிகள் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments