இந்தியா வந்த பாக். பெண் கிரிக்கெட் தொகுப்பாளினி திடீரென திரும்பிச் சென்றார்.. இந்தியா மீதான பகையுடன் பதிவிட்ட முந்தைய பதிவுகள் காரணமா?

0 10135
இந்தியா வந்த பாக். பெண் கிரிக்கெட் தொகுப்பாளினி திடீரென திரும்பிச் சென்றார்.. இந்தியா மீதான பகையுடன் பதிவிட்ட முந்தைய பதிவுகள் காரணமா?

உலகக் கோப்பை வர்ணனையாளரான பாகிஸ்தான் பெண் ஜைனாப் அப்பாஸ் தனிப்பட்ட காரணம் கூறி இந்தியாவை விட்டு வெளியேறினார்.

இந்தியா மீதான பகையுணர்வுடன் சமூக ஊடகங்களில் ஜைனாப் பதிவிட்ட பழைய பதிவுகளால் அவருக்கு எதிர்ப்பு வலுத்தது...35 வயதான ஜைனாப் ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற வர்ணனையாளராக பணியாற்ற கடந்த வாரம் ஹைதராபாத் வந்தார்.

கடந்த 6ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆட்டத்தை அவர் தொகுத்து வழங்கினார். எனினும் திடீரென ஹைதராபாத்தை விட்டு துபாய்க்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments