செந்தில்பாலாஜிக்கு ரத்தம், இசிஜி, எக்கோ பரிசோதனைகள் முடிந்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

0 9232

சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, சுமார் 7 மணி நேர பரிசோதனை முடிந்து மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஓமந்தூரார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருந்து இதயவியல் மற்றும் இதயமாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவக்குழு செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொண்டது.

ஒரு பக்கக் கால் மரத்துப் போன உணர்வு இருப்பதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், வீல் சேரில் அழைத்துவரப்பட்ட செந்தில்பாலாஜி, பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்தபிறகு, துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வீல் சேரிலேயே அழைத்துச் செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments