தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பேரணி

0 949

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், சிறுகுறு தொழில் கூடங்களில் கருப்பு கொடியேற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தனர்.

ஈரோடு கொங்கு கலையரங்கத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்த மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.

மதுரையில் பேரணி சென்றவர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மனித சங்கிலியாக சென்று ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

கோவை சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் சிறு,குறு தொழில் கூடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதோடு மின் கட்டண உயர்வு குறித்து அரசு செவிசாய்க்காவிடில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments