அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கத்தால் 2,000-க்கும் மேற்பட்டோர் பலி : தாலிபான் அரசு

0 1821

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

5.5 முதல் 6.3-க்கு இடைப்பட்ட ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 6 கிராமங்கள் முழுவதுமாக உருக்குலைந்து விட்டதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உதவுமாறும் தாலிபான்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments