ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிவு.. பொதுமக்கள் அச்சம்

0 1155

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே காரியமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாயில் வால்வுப் பகுதி உடைந்து கியாஸ் வெளியேறிவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காரியமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இரண்டு எண்ணெய்க் கிணறுகளை அமைத்து எண்ணெய் மற்றும் கியாஸ் எடுத்து வந்தது.

இந்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கிணற்றில் இருந்து கியாஸ் வெளியேறி வருவதாக பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து அங்கு ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

குழாயில் உள்ள வால்வுப் பகுதியில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்ளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் குழாய்களை மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், அடுத்த மூன்று நாள்களுக்குள் குழாய் உடைப்பு சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments