கோயம்புத்தூர் கட்டுமானப் பணிக்காக திறந்து வைக்கப்பட்ட தரைத்தள தொட்டிக்குள் தவறி விழுந்து மாணவன் பலி

0 1009

கோவை மாவட்டத்தில், அரசுப்பள்ளியின் திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து தனியார் பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.

நாகராஜபுரம் அன்னை சத்யா நகரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தரைமட்ட தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 6 வயது தனியார் பள்ளி மாணவன் குகன்ராஜ், பள்ளி வளாகத்தில் விளையாடிய போது தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

சடலத்தை  உறவினர்கள் வீட்டிற்கு கொண்டுச் சென்ற நிலையில், தகவலறிந்த தொண்டாமுத்தூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றினர். கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் அஜாக்கிரதையே விபத்திற்கு காரணமென சிறுவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments