நேற்று தஞ்சையில் ரூ.756 கோடி, இன்று சென்னையில் ரூ.753 கோடி குறுந்தகவல் குறித்து வங்கியிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை

0 1470

சென்னை, தஞ்சாவூரைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் பார்மஸி ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 753 கோடி ரூபாய் டெபாசிட்டானதாக குறுந்தகவல் வந்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த, மருந்து கடை ஊழியரான முகமது இத்ரிஸ் என்பவரின் கோட்டாக் மகேந்திரா வங்கி கணக்கில் 753 கோடி டெபாசிட் ஆகி இருப்பது போன்று மெசேஜ் வந்துள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டதாக தெரிவித்துள்ள முகமது இத்ரிஸ், இதுகுறித்து கணக்கு வைத்துள்ள
அண்ணாசாலை கிளையையும், வாடிக்கையாளர் சேவை மையத்தையும் தொடர்புக் கொண்ட போதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

தற்போது தனது வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments