மின்கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி, கருப்புக்கொடி ஏற்றி போராடப்போவதாக, தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அறிவிப்பு

0 878

மின்கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி, கருப்புக்கொடி ஏற்றி போராடப்போவதாக, திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மின் நிலைக்கட்டண உயர்வு, பீக் ஹவர் கட்டணம் உள்ளிட்டவற்றை திரும்ப பெறக் கோரி தொழில்துறையினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வரும் 9 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது எனவும், அன்றைய தினத்தில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments