மனித குலத்திற்கு சாபக்கேடான நக்சல்வாதத்தை வேரோடு அழிப்பதில் அரசு உறுதி - அமித் ஷா

0 848

நாட்டில் இன்னும் 2 ஆண்டுகளில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக டெல்லியில் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

மகாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர்களும், ஒடிசா, பீகார், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநில அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

2010ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2022ஆம் ஆண்டில் இடதுசாரி பயங்கரவாதத்தால் உயிரிழந்த பாதுகாப்புப்படையினர் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனித குலத்திற்கு சாபக்கேடான நக்சல்வாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வேரறுக்க உறுதியாக உள்ளதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments