ஆசிய விளையாட்டில் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற வீரர் வெள்ளி மற்றும் தங்கம் வென்றார்

0 5200

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.

பேரளம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன்- தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் ராஜேஷ், ஆசிய விளையாட்டுப்போட்டியில் கலப்பு ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், தற்போது தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அவரது தாயார் தமிழ்ச்செல்வி, தனது மகன் ஒலிம்பிக்கிலும் இந்தியாவிற்காக பதக்கம் வெல்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments