சிரிய ராணுவ வீரர்கள் இரவு பகலாகப் போர் விமான பாராசூட் மூலம் குதித்து போர் ஒத்திகை

0 2075

சிரிய நாட்டு பாதுகாப்பு படையினர் போர் விமானங்களிலிருந்து பாராசூட்டுடன் குதித்து இரவு பகலாக போர் ஒத்திகை மேற்கொண்டனர்.

ரஷ்ய நாட்டு போர் விமானங்களையும், ராணுவ ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி ஆயிரத்து 500 முறை வீரர்கள் வானில் இருந்து குதித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்துவரும் நிலையில், துருக்கி அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் போராளி குழுக்களால் அரசு கவிழாமல் இருக்க அதிபர் பஷர் அல் அஸாதுக்கு ரஷ்ய ராணுவம் உதவிவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments