நாமக்கல்லில் கேஸ் ஏஜென்சி நிறுவன ஊழியர் கேஸ் கசிவை சரி செய்ய முயன்ற போது ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

0 2020

நாமக்கல்லில் கேஸ் கசிவை சரி செய்ய முயன்றபோது சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பெண் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசிக்கும் பார்த்தசாரதியின் வீட்டிற்கு பாரத் கேஸ் விநியோகம் செய்யும் ஏஜென்சியை சேர்ந்த அருண்குமார் என்பவர் சிலிண்டர் விநியோகம் செய்ய வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, பார்த்தசாரதியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் தனலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்த எச்.பி. சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவை அருண்குமார் சரி செய்தபோது, சிலிண்டர் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.

வீடு முழுவதும் தீ பரவியதில் தனலட்சுமிக்கும், பார்த்தசாரதிக்கும் 90 சதவீத காயம் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில, அருண்குமார் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments