சென்னையில் தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

0 76207

சென்னை, பல்லாவரத்தில் தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.

ஒரு ஏக்கர் 19 ஆயிரத்து சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதாக ஆட்சித்தலைவருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், வருவாய்த்தறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, பல்லாவரம் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் இரண்டு வீடுகள் மற்றும் அதில் இயங்கி வந்த பட்ஸ் தயாரிக்கும் தொழிற்கூடம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments