நாட்டு மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து அரசியல் ஒரு வகையான அரசியல் நடந்து கொண்டிருகின்றது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

0 2999

நாட்டு மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து ஒரு வகையான அரசியல் நடந்து கொண்டிருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.ஆதனூர் கிராமத்தில் நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் கலந்து கொண்டார்.

இதில் பல்வேறு சமூக மக்கள் சுமார் 250 பேர் வேத மந்திரங்கள் முழங்க ஐதீக முறைப்படி பூணூல் அணிந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் தங்களுடைய சாதியின் அடிப்படையில் கலர் கலராக கயிறுகளை கையில் கட்டிக்கொண்டு வித்தியாசப்படுத்தி கொண்டு வருகின்றனர் என்றும் இது எந்த மாதிரியான கலாச்சாரம் ? என தெரியவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments