மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்கக் கோரிக்கை... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

0 1463

புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க கட்டுப்பாடுகள் விதித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்கக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ ஆணையத்தின் கட்டுப்பாட்டால், எதிர்காலத்தில் புதிய மருத்துவமனைகளும், மருத்துவத் துறையில் புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என தெரிவித்துள்ளார்.

புதிய விதிகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அறிவுரைகளை வழங்குமாறும் கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments