இந்தியாவுடன் நெருக்கமான உறவைத் தொடர ஆர்வமாக இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ பேச்சு

0 1434

இந்தியாவுடன் மோதல் போக்கை அதிகரிக்க கனடா விரும்பவில்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர், கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் தொடர்ந்து நல்ல உறவில் இருப்பது மிகவும் முக்கியமானது என்றார். இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்று குறிப்பிட்ட ட்ரூடோ, நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் தாம் தீவிரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் நிஜ்ஜார் கொலையில் முழு உண்மைகளையும் தாங்கள் பெறுவதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments