சென்னை முன்விரோதத்தில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது

0 3530

சென்னை ஓட்டேரியில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை செய்த சிறுவன் உள்ளிட்ட 4 பேர் ரத்தக் கறை கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

கொளத்தூரில் வசித்து வந்த அஜிசுல்லா என்பவர் ஓட்டேரி பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்த அருண் என்பவரிடம் போதைப் பொருட்களை விற்று தருமாறு அஜிசுல்லா கேட்டதாகவும், அதற்கு மறுத்த அருணை அஜிசுல்லா தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

அஜிசுல்லாவை பழிவாங்க முடிவு செய்த அருண், அங்குள்ள பூங்கா ஒன்றில் கஞ்சா புகைத்துவிட்டு போதையில் இருந்த தனது நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

அதன் பேரில் ஓட்டேரியில் தனது உறவினர் வீட்டில் இருந்த அஜிசுல்லாவை அருண் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து வெட்டியதாக கூறப்படுகிறது.

தலையில் பலத்த காயமடைந்த அஜிசுல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அருண், 16 வயது சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 4 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

கொலை செய்வதற்கு கத்தியைக் கொடுத்த பருதீன் என்ற ரவுடியையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments