சாக்லெட்டை எடுக்க ஃபிரிட்ஜை திறந்த சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு... வெளியான பதைபதைக்கு சிசிடிவி காட்சி

0 1932

தெலங்கானா மாநிலம் நந்திபேட் கிராமத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட் எடுப்பதற்காக ஃபிரிட்ஜை திறக்க முயன்ற 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நவிபேட்டா கிராமத்தை சேர்ந்த சேகர் - சம்யுக்தா தம்பதியினரின் தங்களது மகள் ரித்திஷாவுடன் நந்திபேட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது என் மார்ட் என்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

மின்சாரம் பாய்ந்து சிறுமி ஃபிரிட்ஜை பிடித்தபடியே தொங்கிக் கொண்டிருந்த நிலையில், சேகர் உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவர்கள் குழந்தை  கவலைக்கிடமாக உள்ளதாக கூறியதையடுத்து, நிஜாமாபாத் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையின் உறவினர்கள் சூப்பர்மார்க்கெட் முன் தர்ணாவில் ஈடுபட்டு, கற்களை வீசி தாக்குதல் நடத்தியதையடுத்து, காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments