சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இரும்பு வியாபாரியை கத்தியால் குத்தி ரூ.8 லட்சம் பணம், உயர் ரக செல்போன்கள் கொள்ளை.. !!

0 1371

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரும்பு வியாபாரியை கத்தியால் வெட்டி பணம் மற்றும் செல்போன்களை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இரும்பு வியாபாரியான பிரகாஷ் பாபு நேற்று இரவு மண்ணடி பகுதியில் 8 லட்ச ரூபாய் கலெக்ஷன் பணத்தை வசூல் செய்து தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

GA ரோடு அருகே வந்து கொண்டிருந்த பொழுது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் பிரகாஷ் பாபுவின் இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளி விட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் இடது கை மற்றும் வலது கை பகுதியில் வெட்டி விட்டு அவரிடமிருந்த 8 லட்ச ரூபாய் பணம், ஒரு ஐபோன், ஒரு கூகுள் பிக்சல் போனை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

காயமடைந்த பிரகாஷ் பாபு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments