செங்கல்பட்டில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மலைப்போல் தேங்கியுள்ளன

0 2311

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்த நிலையில் காவல் நிலையம் எதிரே குவிந்துள்ளன.

வாகனங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை முடித்து, அவற்றை ஏலத்தில் விடவோ அல்லது, ஸ்கிராப்பிற்கு பயன்படுத்தவோ ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும், இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் மினிலாரி, உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அகற்றப்படாமல் பல ஆண்டுகளாக மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து துருபிடித்த நிலையில் புல்புதர்கள் மரங்கள் சூழ்ந்து குவிந்து கிடக்கின்றன.

துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு இந்த வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments