மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு போதை மருந்து கடத்தல் இந்தாண்டின் மிகப்பெரிய போதை மருந்து வேட்டை - தாய்லாந்து காவல்துறை

0 1351

மியான்மரிலிருந்து கடத்தி வரப்பட்ட 68 கோடி ரூபாய் போதை மாத்திரைகளை கைப்பற்றிய தாய்லாந்து போலீசார், இது தான் தங்கள் நாட்டில் இந்தாண்டின் மிகப்பெரிய போதை மருந்து வேட்டை எனத் தெரிவித்துள்ளனர்.

ரகசியத் தகவலின் பேரில், நகான் படோம் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்திய போலீசார், ஒன்றரை கோடி மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள், 400 கிலோ மெத்தம்பெட்டமைன் மூலப்பொருள் மற்றும் சிறிய அளவில் ஹெராயினையும் கைப்பற்றினர்.

வீட்டிலிருந்த 4 பேரை கைது செய்து தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments