கீழ்பாக்கத்தில் தாறுமாறாக காரை ஓட்டி மோதியதில் ஒருவர் பலி, மூன்று பேர் காயம். 4 வாகனங்கள் சேதம்

0 3835

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் ஒருவர் கார் ஓட்டிச் சென்ற போது பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் தாறுமாறாக ஓடி ஒருவர் உயிரிழந்தார். புரசைவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஜெயக்குமார் என்பவர் அழகப்பா சாலையில் சென்ற போது இவ்விபத்து நேரிட்டது.

விபத்தின்போது பதிவான சிசிடிவி காட்சியில், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் முதியவர் ஒருவர் தூக்கி வீசப்படுவதும் தொடர்ந்து அந்தக் கார் அங்கு நின்றிருந்த வாகனங்கள் மீது மோதுவதும் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் கீழ்ப்பாக்கம் பிளவர்ஸ் சாலையை சேர்ந்த பெயிண்ட்டரான பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தூக்கி வீசப்பட்ட முதியவர் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments