கோவை நகைக்கடை உரிமையாளர் தாக்கி 5 கிலோ தங்க நகைகள் கொள்ளை... காரையும் கடத்திய கும்பல்

0 2408

கோவை நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் இருந்து நள்ளிரவில் 5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு காரையும் கடத்திச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ராஜ வீதியில் நகைக்கடை வைத்துள்ள பிரசன்னா, பெங்களூருவில் இருந்து 5 கிலோ எடையுள்ள புதிய நகைகளை வாங்கிக்கொண்டு தமது கடைப் பணியாளர்கள் 3 பேருடன் காரில் கோவை திரும்பியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி ஆற்றுப்பாலத்தின் மீது பிரசன்னாவின் காரை 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர்.

காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய நகைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள், தமது காரையும் எடுத்துச் சென்றுவிட்டதாக பிரசன்னா போலீசில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments