ஜெய்சங்கர்- பிளிங்கன் பேச்சுவார்த்தையில் கனடா விவகாரம் இடம் பெறவில்லை... அமெரிக்கா விளக்கம்

0 1644

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை கடந்த வாரம் குவாட் நாடுகளின் அமைச்சர்களுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போது கனடா விவகாரம் இடம் பெறவில்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

நியூயார்க்கில் ஐநா.சபையின் 78 வது கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜெய்சங்கர் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார். குவாட் நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இந்த சந்திப்புகள் குறித்து பதிவிட்ட பிளிங்கென் இந்தியா உள்ளிட்ட பல்வேறுநாடுகளின் அமைச்சர்களுடன் பேச்சு நடத்திய போது கனடா விவகாரம் விவாதிக்கப்படவில்லை. ஏற்கனவே கனடா நடத்தி வரும் விசாரணையில் ஒத்துழைக்கும்படி இந்தியாவைக் கேட்டுக் கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments