இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சரின் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம்.. !!

0 3275

ஆந்திராவில் மூளைச்சாவு அடைந்த 18 வயது இளைஞரின் இதயம் தானமாக பெறப்பட்டு, குண்டூரில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அலுவல் ரீதியான ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டது.

குண்டூர் அருகே சிலுக்கல்லூர் பேட்டையை சேர்ந்த அந்த இளைஞரின் இதயம் திருப்பதி தேவஸ்தான இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

சாலை மார்க்கமாக கொண்டு சென்றால் காலதாமதம் ஏற்படும் என்பதால், முதலமைச்சர் அலுவலகத்தில் அனுமதி பெற்று கிரீன் சேனல் மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments