மாணவர் தற்கொலை விவகாரம் - தலைமை ஆசிரியர் மீது பணிநீக்கம்

0 2073

புதுக்கோட்டை மச்சுவாடி முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் மாதேஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.

தலைமுடியை வெட்டிவரச் சொல்லி ஆசிரியர்கள் கண்டித்த நிலையில், பள்ளிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாதேஷ் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மாதேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.

5 மணி நேரம் வாக்குவாதம் நீடித்த நிலையில், மாதேஷின் உடலை எடுத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாதேஷின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று புதுக்கோட்டை-தஞ்சை சாலையில் மாணவர்கள் சாலைமறியல் செய்தனர். இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது தற்காலிக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments