தமிழகத்திற்கு இன்னும் 11,000 கன அடி தண்ணீர் வர வேண்டி உள்ளது : அமைச்சர் துரை முருகன்

0 1153

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய இன்னும் 11 ஆயிரம் கன அடி நீர், நாளைக்குள் வந்துவிடும் என எதிர்பார்ப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினால் உச்சநீதிமன்றத்தின் தனித்தன்மை என்னவாகும்? என்று கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments