செங்கல்பட்டு ஆப்பிள் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

0 1521

செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் இயங்கி வரும் ஆப்பிள் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பெகாட்ரான் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments