இரு வேறு இடங்களில் நடந்த வாகன விபத்தில் படுகாயம் அடைந்த 8 நபர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சின்ராஜ் எம்.பி

0 1407

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சீராப்பள்ளி மற்றும் காக்காவேரி உள்ளிட்ட இடங்களில் நடந்த 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதனை அவ்வழியாக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் பார்த்து உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராசிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அங்கு சென்று பார்த்த போது போதிய மருத்துவர் இன்றி ஒரு மருத்துவர் மட்டுமே 8பேருக்கும் சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் நாமக்கல் மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ராசிபுரத்திற்கு வரவழைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக நாமக்கல், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களுக்கு மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments