பேருந்து நிழற்குடையை இடமாற்றம் செய்யும் போது விபத்து.. கிரேனின் மேல்பகுதி உயரழுத்த மின்கம்பியில் உரசி 4 பேர் படுகாயம்.. !!

0 1398

சென்னையில், பேருந்து நிறுத்த நிழற்குடையை அமைக்கும் போது உயரழுத்த மின்கம்பியில் கிரேன் உரசியதால் மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தனர்.

மணலி புதுநகரில் பேருந்து நிறுத்த நிழற்குடையை எவ்வித காரணமும் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் அங்கிருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

அதே நிழற்குடையை பழைய இடத்தில் அமைப்பதற்காக கிரேன் உதவியுடன் தூக்கி வந்த போது இரும்பு தூண்களை பிடித்தவாறு சிலர் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, கிரேனின் மேல்பகுதி, மேலே சென்றுக் கொண்டிருக்கும் உயரழுத்த மின்கம்பியில் உரசியதில் நிழற்குடையில் மின்சாரம் பாய்ந்து தீப்பொறி ஏற்பட்டது.

அதில், மாநகராட்சி ஊழியர்கள் தினேஷ், சேகர், கிருஷ்ணன், நாகராஜ் ஆகியோர் மின்தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments