தமிழ் மொழியை கற்பதை வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளேன் : ஆளுநர் ஆர்.என்.ரவி

0 1535

தமிழ் மொழியை கற்றுக்கொள்வதை தமது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழுக்கு நிகரான மொழியே இல்லை என்றும் தமிழ் மொழியின் செறிவுக்கு அருகில் வரக்கூடிய மொழி சமஸ்கிருதம் மட்டும் தான் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மொழியை முழுவதுமாக கற்றுக்கொண்டு நாட்டின் பிற பகுதிகளுக்கு அதனை கொண்டு செல்வேன் என்றும் அதனால் மற்றவர்களும் பலனடைவார்கள் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments