புதுக்கோட்டையில் விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ஏ.டி.எம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.90,000 திருட்டு

0 1214

புதுக்கோட்டையில், ஏ.டி.எம்மில் கார்டை மாற்றிக் கொடுத்து 90 ஆயிரம் திருடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் தோப்புநாயகம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவகுமார், புதுக்கோட்டைக்கு சென்ற போது அங்குள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார்.


அப்போது அருகில் நின்ற மூன்று மர்ம நபர்கள், அந்த ஏடிஎம் எந்திரத்தில் பணம் இல்லை எனக் கூறி, அடுத்த இயந்திரத்தில் பணம் எடுக்குமாறு சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது அவர் ஏடிஎம் கார்டை பயன்படுத்திய போது அவரின் கவனத்தை திசை திருப்பி ரகசிய குறியீட்டு எண்ணை அறிந்துகொண்டு அவரை நூதன முறையில் ஏமாற்றி இங்கு பணம் இல்லை, வேறு ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.

அவருக்கு போலி ஏடிஎம் அட்டையை கொடுத்து விட்டு அவரது அட்டையிலிருந்து 40 ஆயிரம் ரூபாயை எடுத்ததோடு, தஞ்சாவூரில் உள்ள நகைக்கடையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கி உள்ளனர். இதுகுறித்த புகாரில் சி.சி.டி.வி பதிவுகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments